கடந்த எட்டு வருடங்களாக தங்களது மகன் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சேர்ந்த தம்பதியினர் மகனை கண்டுபிடித்து தருமாறு சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக சார் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி சேர்ந்த அர்ஜுனன், கலைச்செல்வி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு கடந்த 13 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துவிட்டனர். மகன் சந்தோஷ் குமார் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி பயின்று வந்தார். திடீரென கல்லூரிப் படிப்பை தொடராமல் நின்று விட்டார்.
இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான விடுதலை முன்னணியை சேர்ந்த கணபதி, சுல்தான்பேட்டை சேர்ந்த செல்வராஜ், கோவை உக்கடம் பார்த்திபன், மருத்துவர் தினேஷ் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் ஆவர். இவர்கள் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இதில் செல்வராஜ், கணபதி மட்டும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்கள். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், எனது மகனை கணபதி, செல்வராஜ் போன்றோர்கள் மூளைச் சலவை செய்து ஆயுதப் புரட்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என தெரிய வந்தது. கடந்த எட்டு வருடங்களாக எனது மகன் சந்தோஷ் குமார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
ஆகவே, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உரிய நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக சார் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி சேர்ந்த அர்ஜுனன், கலைச்செல்வி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு கடந்த 13 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துவிட்டனர். மகன் சந்தோஷ் குமார் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி பயின்று வந்தார். திடீரென கல்லூரிப் படிப்பை தொடராமல் நின்று விட்டார்.
இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான விடுதலை முன்னணியை சேர்ந்த கணபதி, சுல்தான்பேட்டை சேர்ந்த செல்வராஜ், கோவை உக்கடம் பார்த்திபன், மருத்துவர் தினேஷ் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் ஆவர். இவர்கள் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இதில் செல்வராஜ், கணபதி மட்டும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்கள். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், எனது மகனை கணபதி, செல்வராஜ் போன்றோர்கள் மூளைச் சலவை செய்து ஆயுதப் புரட்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என தெரிய வந்தது. கடந்த எட்டு வருடங்களாக எனது மகன் சந்தோஷ் குமார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.
ஆகவே, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உரிய நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.