பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சேர்ந்த தம்பதியினர் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு சார் ஆட்சியரிடம் மனு..!

கடந்த எட்டு வருடங்களாக தங்களது மகன் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி சேர்ந்த தம்பதியினர் மகனை கண்டுபிடித்து தருமாறு சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பாக சார் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி சேர்ந்த அர்ஜுனன், கலைச்செல்வி தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு கடந்த 13 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துவிட்டனர். மகன் சந்தோஷ் குமார் கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி பயின்று வந்தார். திடீரென கல்லூரிப் படிப்பை தொடராமல் நின்று விட்டார்.

இந்நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்களான விடுதலை முன்னணியை சேர்ந்த கணபதி, சுல்தான்பேட்டை சேர்ந்த செல்வராஜ், கோவை உக்கடம் பார்த்திபன், மருத்துவர் தினேஷ் ஆகியோர் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் ஆவர். இவர்கள் எங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். இதில் செல்வராஜ், கணபதி மட்டும் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்கள். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், எனது மகனை கணபதி, செல்வராஜ் போன்றோர்கள் மூளைச் சலவை செய்து ஆயுதப் புரட்சிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள் என தெரிய வந்தது. கடந்த எட்டு வருடங்களாக எனது மகன் சந்தோஷ் குமார் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

ஆகவே, சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உரிய நடவடிக்கை எடுத்து மகனை மீட்டுத் தருமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...