பொள்ளாச்சி அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு..!

சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்பக் கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்ப கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அங்கு திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியில் நடந்து செல்லும் நிலை உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

எனவே, குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று தெரிவித்த பொதுமக்கள், எதிர்ப்பை மீறியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பி கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...