சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்பக் கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு அடையாள அட்டைகளை திரும்ப கொடுக்க போவதாக பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அங்கு திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியில் நடந்து செல்லும் நிலை உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
எனவே, குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று தெரிவித்த பொதுமக்கள், எதிர்ப்பை மீறியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பி கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அங்கு திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்த மனுவில், சின்ன தொப்பம்பட்டி கிராமத்தில் சுமார் 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் புதிய டாஸ்மார்க் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்காக பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அந்த வழியில் நடந்து செல்லும் நிலை உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
எனவே, குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று தெரிவித்த பொதுமக்கள், எதிர்ப்பை மீறியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டால் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை அரசிடம் திருப்பி கொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.