கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோவை ஆட்சியரிடம் கொடுக்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று, வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை மனுவை கோவை ஆட்சியரிடம் கொடுக்க அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழக முதல்வரின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் கோவையில் நிறைவடைந்த நிலையில், இன்று கோவையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்ட மற்றும் வசிக்க வீடு வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கோவை ஆட்சியரிடம் அளிக்க வந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பு காட்சியளித்தது.
தனிநபர் மனுக்கள் மட்டுமின்றி குறிப்பாக வீட்டுமனை பட்ட வழங்கக் கோரி – வெங்கடாபுரம், ஈச்சனாரி, சுப்ரமணியபுரம், வேலாண்டிபாளையம் போன்று கோவை சுற்று வட்டார பகுதிகளிலிருந்து அனைத்து பொதுமக்களும் வந்ததால் மக்கள் வெள்ளத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காட்சியளித்தது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:-
25-வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காத நிலையில், கோவை வந்த தமிழக முதல்வர் வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பாக நம்பிக்கை அளித்ததின் பெயரில் இன்று எங்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்துள்ளோம். கண்டிப்பாகத் தமிழக முதல்வர் கூறியதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளோம்.
இவ்வாறு மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறினர்.