கிணத்துக்கடவில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..!

கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அண்மைக் காலமாகக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.இ.எல்.சி அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய பெண் காவலர் பவதாரணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினர்.



தவறான முறையில் யாராவது தங்களிடம் நடந்து கொண்டாலோ, செல்போன் மூலம் தங்களைத் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசினாலோ காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 1098, 181 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...