கிணத்துக்கடவில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..!

கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அண்மைக் காலமாகக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தைகளுக்கான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.இ.எல்.சி அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய பெண் காவலர் பவதாரணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசினர்.



தவறான முறையில் யாராவது தங்களிடம் நடந்து கொண்டாலோ, செல்போன் மூலம் தங்களைத் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசினாலோ காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 1098, 181 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...