உள்ளாட்சி தேர்தல்: திருப்பூரில் விஜய் ரசிகர் இயக்கத்தினர் விருப்ப மனு..!

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட விரும்ப மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.



திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் உள்ளாட்சி தேர்தல் களப்பணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்களை அணுக வேண்டிய விதம் மற்றும் வார்டு வாரியாக நிர்வாகிகள் களப்பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனைநடைபெற்றது.



இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏராளமான ரசிகர்கள் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை அளித்தனர்.

சமீபத்தில், தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் 115 இடங்களில் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...