முதலமைச்சர் கோவை வருகை: மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க தடை.!!

மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் நாளை அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளில் 22, 23 ,ஆகிய தேதிகளில் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் நாளை காலை, 11.00 மணிக்கு வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும், திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதன்பின், இரவு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 23-ம் தேதி காலை, 11.00 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதன்பின், தனி விமானத்தில் சென்னை செல்கிறார். கோவை மற்றும் திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி விமானநிலையம், வ.உ.சி., மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...