முதலமைச்சர் கோவை வருகை: மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க தடை.!!

மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் நாளை அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளில் 22, 23 ,ஆகிய தேதிகளில் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவையில் நாளை காலை, 11.00 மணிக்கு வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும், திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இதன்பின், இரவு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 23-ம் தேதி காலை, 11.00 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதன்பின், தனி விமானத்தில் சென்னை செல்கிறார். கோவை மற்றும் திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி விமானநிலையம், வ.உ.சி., மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...