மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நாளை அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் திருப்பூர் பகுதிகளில் 22, 23 ,ஆகிய தேதிகளில் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாநகர காவல் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் நாளை காலை, 11.00 மணிக்கு வ.உ.சி., மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நிகழ்ச்சி முடிந்ததும், திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதன்பின், இரவு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். 23-ம் தேதி காலை, 11.00 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதன்பின், தனி விமானத்தில் சென்னை செல்கிறார். கோவை மற்றும் திருப்பூருக்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி விமானநிலையம், வ.உ.சி., மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.