நாட்டு இன மாடுகளை காக்க பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம் - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு.!!

அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு இன காளை மாடுகளைக் காக்க வேண்டும் என்பதற்காக இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.


பொள்ளாச்சி: நாட்டு இன மாடுகளை காக்க பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் என்றாலே விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தான். இங்கு ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர்.

தற்போது கிராமம் அனைத்தும் நகரமயம் ஆகி வருவதோடு இளைஞர்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியூர்களுக்கு வேலைக்காகச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மீண்டும் இளைஞர்கள் விவசாயிகளாகவும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு இன காளை மாடுகளைக் காக்க வேண்டும் என்பதற்காக இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.



இந்த பந்தயத்தில் கோவை, திருப்பூர், என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளை பந்தயத்தில் உரிமையாளர்கள் களம் இறக்கினார்கள்.

இதில் இரண்டு, மூன்று என்ற பல் வரிசை கொண்ட வயது அடிப்படையில் காளைகள் போட்டியில் களம் கண்டது. போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் காளை மற்றும் அதன் உரிமையாளர்களுக்குக் கோப்பையும் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்றும், இந்த கால இளைஞர்கள் இடையே நாட்டு மாடு வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையையும் உணர்த்தும் வகையில் இந்த போட்டி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...