'கோவை விமான நிலையத்தில் அச்சுறுத்தும் தெரு நாய்கள்'- பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் பயணிகள்...!

கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு கோவை விமான நிலையம் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்கியது. விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கும், அனுப்ப வருபவர்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்து தர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சமீப நாட்களாக விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அமைதியான விமான நிலையம் (Silent Airport) ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது. அதேசமயம் அங்கு சுற்றித்திரியும், தெருநாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தமும் சண்டையிடும் சத்தமும் விமான நிலையத்தையே சத்தமாக மாற்றுகிறது.

இவற்றின் சில படங்களை விமான ஆர்வலரான மாணவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வயதான பெண்மணியை நோக்கி நாய்கள் ஓடியதால் அவர் கீழே விழ முற்பட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர், பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்றுத் கூறியிருந்தார்.

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் எஸ்.செந்தில் வளவன் கூறுகையில்,



விமான நிலையத்தில் நாய்கள் நடமாட்டம் இருப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம்.

அருகில் குடியிருப்புகள் இருப்பதால், டெர்மினல் பகுதிக்கு அதிகளவில் நாய்கள் வருகின்றன. நாய்களுக்கு கருத்தடை மட்டுமே செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலங்குகள் உரிமைக் குழுவின் கூற்றுப்படி, நாய்களை அவற்றின் இருப்பிடங்களில் விட வேண்டும். மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள நாய்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து, பயணிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சிட்டிசன் வாய்ஸ் (சிவிசி), தலைவர், சி.எம். ஜெயராமன் கூறுகையில்,

விமான நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்பு மாடுகளால் இதுபோன்ற பிரச்னைகள் காணப்பட்டன. அதற்கு தீர்வு கிடைத்தது.

எனவே விமான நிலையத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில், விமான நிலைய வளாகத்தில் விக்கெட் வகை வாயில்களை அமைக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வாயில்கள் வழியாக விலங்குகள் வராது. இது எங்களின் ஆலோசனை என்றார்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...