'கோவை விமான நிலையத்தில் அச்சுறுத்தும் தெரு நாய்கள்'- பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் பயணிகள்...!

கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோயம்புத்தூர் விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களின் தொல்லையால் பயணிகள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு கோவை விமான நிலையம் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்கியது. விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கும், அனுப்ப வருபவர்களுக்கும் பல்வேறு வசதிகளை செய்து தர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சமீப நாட்களாக விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அமைதியான விமான நிலையம் (Silent Airport) ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது. அதேசமயம் அங்கு சுற்றித்திரியும், தெருநாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தமும் சண்டையிடும் சத்தமும் விமான நிலையத்தையே சத்தமாக மாற்றுகிறது.

இவற்றின் சில படங்களை விமான ஆர்வலரான மாணவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வயதான பெண்மணியை நோக்கி நாய்கள் ஓடியதால் அவர் கீழே விழ முற்பட்ட சம்பவம் குறித்து குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர், பயணிகளுக்கு உதவ விமான நிலைய நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும் என்றுத் கூறியிருந்தார்.

இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் எஸ்.செந்தில் வளவன் கூறுகையில்,



விமான நிலையத்தில் நாய்கள் நடமாட்டம் இருப்பதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. கடந்த 3 மாதங்களாக இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம்.

அருகில் குடியிருப்புகள் இருப்பதால், டெர்மினல் பகுதிக்கு அதிகளவில் நாய்கள் வருகின்றன. நாய்களுக்கு கருத்தடை மட்டுமே செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விலங்குகள் உரிமைக் குழுவின் கூற்றுப்படி, நாய்களை அவற்றின் இருப்பிடங்களில் விட வேண்டும். மேற்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள நாய்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து, பயணிகள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சிட்டிசன் வாய்ஸ் (சிவிசி), தலைவர், சி.எம். ஜெயராமன் கூறுகையில்,

விமான நிலையம் உட்பட அனைத்து இடங்களிலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதை மாநகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்பு மாடுகளால் இதுபோன்ற பிரச்னைகள் காணப்பட்டன. அதற்கு தீர்வு கிடைத்தது.

எனவே விமான நிலையத்தில் இதற்கு தீர்வு காணும் வகையில், விமான நிலைய வளாகத்தில் விக்கெட் வகை வாயில்களை அமைக்க விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு வாயில்கள் வழியாக விலங்குகள் வராது. இது எங்களின் ஆலோசனை என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...