சரவணம்பட்டி எஸ்.என்.எஸ்., கல்லூரி பட்டமளிப்பு விழா.!!

தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ்குமார் வர்ஷ்னி தெரிவித்துள்ளார்.


கோவை: தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் உலக அளவில் அதிகரித்துள்ளதாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ்குமார் வர்ஷ்னி தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியிலுள்ள எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் சார்பில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகள் சார்பில் 2019-2020 மற்றும் 2020-2021 ம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 2346 மாணவ மாணவிகள் பட்டங்களை வழங்கும் பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் எஸ்.என்.எஸ் கல்வி குழுமங்களின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், தாளாளர் ராஜலட்சுமி மற்றும் இயக்குனர் நளின் விமல்குமார், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தலைமை ஆலோசகர் டாக்டர் சஞ்சீவ் குமார் வர்ஷ்னி கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.



முன்னதாக மேடையில் உரையாற்றிய சஞ்சீவ் குமார் வர்ஷ்னி பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்களுக்கு அவர்களின் திறமைகளுக்கேற்ப உலகளவில் வாய்ப்புகள் காத்திருப்பதாகவும், இந்தியர்கள் பலர் பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் பணியாற்றி வருவதாகும் தெரிவித்தார்.

தற்பொழுது தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய சவாலாகப் பருவநிலை மாற்றம் இருந்து வருவதாகத் தெரிவித்தவர், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர்கள் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளைக் காண முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.



தற்போது இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பங்கு அளப்பரியது என்றார். இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் சவால்களை எதிர்கொள்ளத் தொழில்நுட்பம் பயின்ற மாணவர்கள் கண்டுபிடிப்புகளும் உதவிக்கரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...