வீட்டிற்குள் கார் நுழைந்து 5 பேர் காயம்- காரை ஓட்டியவர் தலைமறைவு

கோவை வடவள்ளியில் இருந்து வேடப்பட்டி செல்லும் வழியில் உள்ள அஜ்ஜனூரில் சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வடவள்ளியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று அஜ்ஜனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீட்டின் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது.



இந்த விபத்தில் அங்கிருந்த காளிமுத்துவின் தாய் லட்சுமி (60), மருமகள் சரஸ்வதி (35), பேத்திகள் சங்கீதா (12), உதயசங்கரி (9) மற்றும் ரங்கநாதன் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காரை ஓட்டிவந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் ஆய்வாளர்  சித்ரா மற்றும் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய காரை பரிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தது சுண்டபாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...