திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள டிஎம்எப் சுரங்க நடை மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5-மணி நேரத்திற்கும் மேலாக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாகத் திருப்பூர் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கேரிப்பாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனிடையே, திருப்பூர் ஊத்துக்குளி சாலை டிஎம்எப் சுரங்க மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாகஇடுப்பு அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் இன்று சுரங்கப் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் வாகனம் மூலம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 5-மணி நேரத்திற்கும் மேலாக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாகத் திருப்பூர் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலைகளில் ஆறாக ஓடியது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கேரிப்பாளையம், மும்மூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனிடையே, திருப்பூர் ஊத்துக்குளி சாலை டிஎம்எப் சுரங்க மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாகஇடுப்பு அளவிற்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகள் இன்று சுரங்கப் பாலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவுநீர் வாகனம் மூலம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.