கோவை-பொள்ளாச்சி இடையே மீண்டும் ரயில்கள் இயக்கம்!

17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: 17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை-பொள்ளாச்சி இடையே இன்று முதல் ரயில் இயக்கப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதம் கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இன்று முதல் இயக்கப்படும் முன் பதிவில்லா விரைவு ரயில் கோவையிலிருந்து மாலை 6.15 க்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி வந்து அடையும் எனவும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து நாளை முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் காலை 8.40 மணி அளவில் கோவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.17 மாதங்களுக்குப் பிறகு கோவை பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...