17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: 17-மாதங்களுக்குப் பிறகு கோவை - பொள்ளாச்சி இடையே இன்று முதல் முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை-பொள்ளாச்சி இடையே இன்று முதல் ரயில் இயக்கப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதம் கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இன்று முதல் இயக்கப்படும் முன் பதிவில்லா விரைவு ரயில் கோவையிலிருந்து மாலை 6.15 க்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி வந்து அடையும் எனவும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து நாளை முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் காலை 8.40 மணி அளவில் கோவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.17 மாதங்களுக்குப் பிறகு கோவை பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை-பொள்ளாச்சி இடையே இன்று முதல் ரயில் இயக்கப்பட்டுள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை போத்தனூர் - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் மின் மயமாக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதம் கோவை போத்தனூர் - பொள்ளாச்சி இடையே ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு இன்று முதல் ரயில் சேவை இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இன்று முதல் இயக்கப்படும் முன் பதிவில்லா விரைவு ரயில் கோவையிலிருந்து மாலை 6.15 க்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி வந்து அடையும் எனவும் சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியிலிருந்து நாளை முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் காலை 8.40 மணி அளவில் கோவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.17 மாதங்களுக்குப் பிறகு கோவை பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.