வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். குப்பை மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டை பொதுமக்களும் ஆற்றினர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தின் வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் குப்பை மேலாண்மையில் சிறப்பான பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (31.07.2026) நடைபெற்ற நிகழ்வில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்ட இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வடவள்ளி பகுதியில் இப்பணியை சிறப்பாக செய்த தூய்மைப் பணியாளர்கள் கலைமணி மற்றும் முருகம்மாள் ஆகியோருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.



இப்பணிகளை திறம்பட கண்காணித்த சுகாதார மேற்பார்வையாளர் முருகன்மற்றும் ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர் கனகராஜ்ஆகியோருக்கும் மாநகராட்சி ஆணையர் பாராட்டுதல்கள் வழங்கினார். மேலும், வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் நர்மதா, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி செயற்பொறியாளர் மண்டல சவிதா, சுகாதார இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

குப்பை மேலாண்மையில் தரம் பிரித்தல் முறை மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய மாநகராட்சி ஆணையர், இதுபோன்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் ஊக்குவித்தார். பொதுமக்களும் குப்பைகளை ஆதாரத்திலேயே தரம் பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...