புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மெய்நிகர் ஆய்வகம் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளி குழந்தைகளுடன் மேயர் கலந்துரையாடினார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தின் கீழ் வரும் புளியகுளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண் 66-க்கு உட்பட்ட புளியகுளம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் நேரில் சென்று பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

வெரினாடா உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மேயர், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கல்வி வழங்குவதற்காக மெய்நிகர் (AR & VR LAB) ஆய்வகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த ஆய்வகம் பெரிதும் உதவும் என்று மேயர் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி வெரிவாடா ஆரம்பப் பள்ளிக்கு சென்று அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடன் நேரடியாக உரையாடி, அவர்களின் கல்வி தேவைகள் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து விசாரித்தார். குழந்தைகளின் நலன் சார்ந்த விஷயங்களை மேயர் கவனமாக கேட்டறிந்து, தேவையான மேம்பாடுகளை செய்ய உறுதியளித்தார்.



இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா(பொ), உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார்(பொ), உதவி நகர திட்டமிடுநர் சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெ.யபார்வதி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும், நவீன வசதிகளை வழங்குவதற்கும் கோயம்புத்தூர் மாநகராட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...