காரமடையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

காரமடையில் 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: காரமடையில் 10-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 10-ஆம் வகுப்பு மாணவி. பள்ளி மாணவி தொடர் விடுமுறை காரணமாகக் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் மாணவி கேரளாவில் தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற பொழுது அருகிலிருந்த இளைஞர் லோகேஷ் குமார் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி கேரளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற மாணவியை இளைஞர் லோகேஷ் குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அன்னூர் விண்ணப்பள்ளியில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காவல் துறையினரின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...