நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி: நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (20). இவரும் நெகமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16-வயது சிறுமியும் பழகியதாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.
தற்போது சிறுமி 6-மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் குறித்து ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கே சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16-வயது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குழந்தைகள் திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
இதனையடுத்து கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (20). இவரும் நெகமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16-வயது சிறுமியும் பழகியதாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.
தற்போது சிறுமி 6-மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் குறித்து ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கே சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16-வயது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குழந்தைகள் திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.
இதனையடுத்து கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.