நெகமம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (20). இவரும் நெகமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16-வயது சிறுமியும் பழகியதாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.

தற்போது சிறுமி 6-மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் குறித்து ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கே சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16-வயது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குழந்தைகள் திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...