நெகமம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!

நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: நெகமம் அருகே 16-வயது சிறுமியைத் திருமணம் செய்த 20-வயது இளைஞர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் (20). இவரும் நெகமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16-வயது சிறுமியும் பழகியதாகத் தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியைத் திருமணம் செய்துள்ளார்.

தற்போது சிறுமி 6-மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமி கர்ப்பம் குறித்து ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பரிசோதனைக்குச் சென்றுள்ளார். அங்கே சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16-வயது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், குழந்தைகள் திருமணத் தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் பேருந்து நிலையம் அருகே வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...