கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.
கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
இது தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்த நிலைமை என்று பாராமல் எனது சொந்த பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்.பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரபட்சமின்றி இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு என்பதுஅனைவருக்கும் தேவை தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
இது தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்த நிலைமை என்று பாராமல் எனது சொந்த பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்.பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரபட்சமின்றி இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு என்பதுஅனைவருக்கும் தேவை தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.