எனது சொந்த மகளுக்கு ஏற்பட்டது போல வலியை தருகிறது.. கோவை மாணவியின் பெற்றோரை சந்தித்த அமைச்சர்கள்!

கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.


கோவை: கோவையில் பாலியல் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி வீட்டிற்கு வந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் செந்தில் பாலாஜி பெற்றோர்களைச் சந்தித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.

இது தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்த நிலைமை என்று பாராமல் எனது சொந்த பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன்.பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரபட்சமின்றி இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு என்பதுஅனைவருக்கும் தேவை தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் அது தேவைப்படுகிறது. அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...