கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய்‌ அமைக்கும்‌ பணியில்‌ சாலை சீரமைத்தல்‌ துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்!

இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்ட குழாய்‌ அமைக்கும்‌ பணியில்‌ சாலை சீரமைத்தல்‌ மற்றும்‌ வெட்மிக்ஸ்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ துரிதமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 24 மணி நேர குடிநீர் திட்டத்தில்‌ சூயஸ்‌ நிறுவனத்தினர்‌ குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ கோவை நகரில்‌ பல்வேறு இடங்களில்‌ நடைபெற்றுக்‌ கொண்டுள்ளது. குடிநீர் குழாய்கள்‌ அமைத்த பிறகு, குழாய்‌ பதித்த இடங்களில்‌ (Road Restoration மற்றும்‌ Wet mix) அமைக்கும்‌ பணிகள்‌ தற்போது போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாரமேடு மெயின்‌ ரோடு, மணியகாரன்பாளையம்‌, ராகாச்சி கார்டன்‌ மெயின்‌ ரோடு, தில்லை நகர்‌, குறிஞ்சி கார்டன்‌, பி.ஆர்‌.பி. கார்டன்‌, பாலசுந்தரம்‌ பிரதான சாலை, எம்‌.ஜி.ரோடு, பாரதி நகா்‌, ஜே.கே.கார்டன்‌, ரோஸ்‌ கார்டன்‌, ஏ.கே.எஸ்‌.நகர்‌, பொன்னையராஜபுரம்‌ மெயின்‌ ரோடு, கோபால்‌ லே-அவுட்‌, சொக்கம்புதார்‌ மெயின்‌ ரோடு போன்ற பல்வேறு இடங்களில்‌ கடந்த 06.11.2021 முதல்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று வரை சுமார்‌ 9200 Length (rm) அளவுக்கு (Road Restoration மற்றும்‌ Wet mix) போடப்பட்டுள்ளது. மேலும்‌, இப்பணிகளை போர்க்கால அடிப்படையில்‌ விரைவாகவும்‌, தரமாகவும்‌ மேற்கொள்ள ஏதுவாக இராட்சத இயந்திரங்கள்‌, ஜே.சி.பி. உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள்‌ மற்றும்‌ 100-க்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்கள்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிகள்‌ விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ பொறியாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளார்‌.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...