கோவையில் பள்ளி சிறுமியின்‌ தற்கொலைக்கு காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌ - பாமக இளைஞர் சங்க மாநில துணை செயலாளர்..!

அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்களின்‌ பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில்‌, போக்சோ சட்டத்தைப்‌ பற்றியும்‌, புகார்‌ அளிக்க - உதவி எண்‌ அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம்‌ வைக்க அரசு உத்தரவிட வலியுறுத்தல்.



கோவை: கோவையில் பள்ளி சிறுமியின்‌ தற்கொலைக்கு காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌ என்று பாமக இளைஞர் சங்க மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவையைச்‌ சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி வியாழக்கிழமை மாலை வீட்டில்‌ யாரும்‌ இல்லாதபோது தனது அறையில்‌ தூக்கிட்டுத்‌ தற்கொலை செய்து கொண்டார்‌ என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தோம்‌.

போலீஸ்‌ விசாரணையில்‌ சிறுமி படித்த பள்ளியில்‌ வேலை செய்த இயற்பியல்‌ ஆசிரியர்‌ மிதுன்‌ சக்ரவர்த்தி என்பவர் சிறுமிக்கு அளித்த தொடர்‌ பாலியல்‌ தொல்லைகளால்‌ தான்‌ அவர்‌ தற்கொலை செய்து கொண்டார்‌ என்று தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின்‌ கீழ்‌ வழக்குப்‌ பதிவு செய்து அவரை கைது செய்து இருப்பது சற்று ஆறுதலை கொடுத்தாலும்‌, இந்த வழக்கில்‌ தொடர்புடைய அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்வதே நியாயமாகும்‌.

பாமகவின்‌ இரண்டு கோரிக்கைகள்‌:

1. உடனடியாக சிறுமியின்‌ தற்கொலைக்குக்‌ காரணமான அனைவரையும்‌ போக்சோ சட்டத்தில்‌ கைது செய்ய வேண்டும்‌.

2 அனைத்து பள்ளிகளிலும்‌ மாணவர்களின்‌ பார்வை படக்கூடிய முக்கியமான இடத்தில்‌, போக்சோ சட்டத்தைப்‌ பற்றியும்‌, புகார்‌ அளிக்க - உதவி எண்‌ அடங்கிய பேனரை பள்ளி நிர்வாகம்‌ கட்டாயமாக வைக்க வேண்டும்‌ என்று அரசு உத்தரவிட வேண்டும்‌.

இந்த இரண்டு நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்‌. இல்லையெனில்‌ இளைஞர்களை ஒன்று இரட்டி மாபெரும்‌ போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...