கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் - பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தல்..!

வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளதால் போக்சோவில் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தபின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை விசாரித்த துணை ஆணையர், பள்ளியின் தலைமை ஆசிரியரும் மாணவியும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர் என்றும், தொடர்ந்து பள்ளி மாணவியை டீசி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியை 'இச்சம்பவம் பேருந்தில் செல்லும்போது நடப்பது போன்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்' என்று கூறப்படுகிறது. மாலை நேரத்தில் பள்ளிக்கு கவுன்சிலிங் என்று அழைத்துச் சென்ற மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கவுன்சிலிங்கை பற்றி பெற்றோரிடம் சொல்லாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மாணவர்களிடமும், போராட்டக்காரர்களிடமும் பேச வேண்டும் என்றார். அமைச்சர்கள் அனைவரும் நேரில் வரவேண்டும் எனவும் உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலைப் பெறுவது பெற்றோர் முடிவு என்று தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...