கோவையில் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் - பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தல்..!

வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.



கோவை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பி.ஆர் நடராஜன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளதால் போக்சோவில் அந்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்தபின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை விசாரித்த துணை ஆணையர், பள்ளியின் தலைமை ஆசிரியரும் மாணவியும் ஒரு மணி நேரம் பேசியுள்ளனர் என்றும், தொடர்ந்து பள்ளி மாணவியை டீசி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியை 'இச்சம்பவம் பேருந்தில் செல்லும்போது நடப்பது போன்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்' என்று கூறப்படுகிறது. மாலை நேரத்தில் பள்ளிக்கு கவுன்சிலிங் என்று அழைத்துச் சென்ற மாணவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கவுன்சிலிங்கை பற்றி பெற்றோரிடம் சொல்லாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மாணவர்களிடமும், போராட்டக்காரர்களிடமும் பேச வேண்டும் என்றார். அமைச்சர்கள் அனைவரும் நேரில் வரவேண்டும் எனவும் உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாணவியின் உடலைப் பெறுவது பெற்றோர் முடிவு என்று தெரிவித்த அவர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணையில் உண்மை இருந்தால் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Newsletter

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...