வனத்துறை அழித்து வரும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா? - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி!

வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திட்டத்தின்கீழ் வளர்த்துவது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா..??

தலைகீழ் போர்டுகளும் தவறான பெயர்களும்..!!



கோவை வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.

இத்தாவரம் அதிவேகமாக பரவுவதாலும் மற்ற தாவரங்களை ஆக்கிரமிப்பதாலும் தமிழக வனத்துறையினர் இத்தாவரத்தை அழிக்க பல கோடிகளில் திட்டம் தீட்டி அழிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இக்குளக்கரையில் வைத்துள்ள இத்தாவரத்திலிருந்து விதைகள் உபரி நீர் வழியாக ஆற்றங்கரைகள் மற்றும் விவசாய நிலங்களில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், பறவைகள் இத்தாவரத்தின் பழங்களை உண்பதாலும் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, இத்தாவரத்தை அகற்றி மாற்றாக நம் நாட்டு மலர்செடிகளை நடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் இரயில்வே பாலத்துக்குக் கீழ் உள்ள பூங்காவில் நடப்பட்டுள்ள தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை கைகளில் தவறான பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு நாம் நன்கறிந்த மூங்கில் தாவரத்திற்குப் பதிலாக மருது என பலகை அச்சிட்டு வைத்துள்ளனர். இது போன்று வெண் நொட்சி, காயா, பவளகுறிஞ்சி, இஞ்சி, காட்டு கொஞ்சி, வேல் வாகை, கள்ளி மலர், நீர்க்குளிரி என அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைத்தும் வேறு பெயர்கள் கொண்ட தாவரங்களின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு குழந்தைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் வந்துசெல்லும் இடத்தில் தவறான பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே தவறான முன்னுதாரணத்தைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம்.

இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்…!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...