வனத்துறை அழித்து வரும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா? - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி!

வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திட்டத்தின்கீழ் வளர்த்துவது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"தமிழக வனத்துறை அழிக்கப் பெரும்பாடுபடும் உன்னி செடியை கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வளர்ப்பது சரியா..??

தலைகீழ் போர்டுகளும் தவறான பெயர்களும்..!!



கோவை வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரையில் நடப்பட்டுள்ள செடிகளில் அந்நிய தாவரமான உன்னிச்செடி (Lantena) நடப்பட்டுள்ளது.

இத்தாவரம் அதிவேகமாக பரவுவதாலும் மற்ற தாவரங்களை ஆக்கிரமிப்பதாலும் தமிழக வனத்துறையினர் இத்தாவரத்தை அழிக்க பல கோடிகளில் திட்டம் தீட்டி அழிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

இக்குளக்கரையில் வைத்துள்ள இத்தாவரத்திலிருந்து விதைகள் உபரி நீர் வழியாக ஆற்றங்கரைகள் மற்றும் விவசாய நிலங்களில் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. மேலும், பறவைகள் இத்தாவரத்தின் பழங்களை உண்பதாலும் பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே, இத்தாவரத்தை அகற்றி மாற்றாக நம் நாட்டு மலர்செடிகளை நடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் உக்கடம் - சுங்கம் புறவழிச்சாலையில் இரயில்வே பாலத்துக்குக் கீழ் உள்ள பூங்காவில் நடப்பட்டுள்ள தாவரங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை கைகளில் தவறான பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்திற்கு நாம் நன்கறிந்த மூங்கில் தாவரத்திற்குப் பதிலாக மருது என பலகை அச்சிட்டு வைத்துள்ளனர். இது போன்று வெண் நொட்சி, காயா, பவளகுறிஞ்சி, இஞ்சி, காட்டு கொஞ்சி, வேல் வாகை, கள்ளி மலர், நீர்க்குளிரி என அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைத்தும் வேறு பெயர்கள் கொண்ட தாவரங்களின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு குழந்தைகள், மற்றும் மாணவ மாணவியர்கள் வந்துசெல்லும் இடத்தில் தவறான பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. எனவே தவறான முன்னுதாரணத்தைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்கிறோம்.

இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்…!

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...