10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.!

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையைச் சேர்ந்த 14 வயது மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் பிரசாந்த் 23, ஏசி மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தினமும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு பிரசாந்த் மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும் வரும்போதும் மாணவியிடம் தவறான செய்கைகளைக் காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பிரசாந்த் கண்டித்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் அதிகரித்ததால் மாணவி இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...