10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.!

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏ.சி மெக்கானிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவையைச் சேர்ந்த 14 வயது மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் பிரசாந்த் 23, ஏசி மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தினமும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு பிரசாந்த் மாணவி பள்ளிக்குச் செல்லும் போதும் வரும்போதும் மாணவியிடம் தவறான செய்கைகளைக் காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பிரசாந்த் கண்டித்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். நாளுக்கு நாள் அதிகரித்ததால் மாணவி இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

பிரசாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...