கிணத்துக்கடவு அருகே பெட்ரோல் பங்கில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதாக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு..!

கல்லாங்காட்டுபுதூர் பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பெட்ரோல் பங்கில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கோவை தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் கிணத்துக்கடவு பகுதிகளில் மாவட்ட அமலாக்கக் குழுவினர்களுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்த குழு கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரு சிறுவர்களையும் பணியில் அமர்த்தியதாக கல்லாங்காட்டுப்புதூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெங்கடாசலம் என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் புகார் செய்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...