கிணத்துக்கடவு அருகே பெட்ரோல் பங்கில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதாக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு..!

கல்லாங்காட்டுபுதூர் பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருந்ததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பெட்ரோல் பங்கில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தியதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி கோவை தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் கிணத்துக்கடவு பகுதிகளில் மாவட்ட அமலாக்கக் குழுவினர்களுடன் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இந்த குழு கிணத்துக்கடவு அடுத்துள்ள கல்லாங்காட்டுபுதூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் 2 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரு சிறுவர்களையும் பணியில் அமர்த்தியதாக கல்லாங்காட்டுப்புதூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெங்கடாசலம் என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட மேலாளர் பி.ஜி. அலெக்ஸ் புகார் செய்தார்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...