கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி படுகாயம்!

கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது (42), இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று கனகராஜ் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம்- வடசித்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் அதிவேகமாக வந்து மொபட் மீது பலமாக மோதியது. இதில் விவசாயி கனகராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் கனகராஜிக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கோவை ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார்(30) மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...