கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே கார் மோதி பால் வியாபாரி காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது (42), இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று கனகராஜ் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம்- வடசித்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் அதிவேகமாக வந்து மொபட் மீது பலமாக மோதியது. இதில் விவசாயி கனகராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் கனகராஜிக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கோவை ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார்(30) மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் வயது (42), இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று கனகராஜ் தனது மொபட்டில் பால் எடுத்துக்கொண்டு காரச்சேரியிலிருந்து செட்டிபாளையம்- வடசித்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் அதிவேகமாக வந்து மொபட் மீது பலமாக மோதியது. இதில் விவசாயி கனகராஜின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் கனகராஜிக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கோவை ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார்(30) மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.