கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு..!

இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை நகர பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம், காந்திபுரம், இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்கெட் அருகில் உள்ள கோபி கானா குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.



இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...