கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு..!

இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை நகர பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம், காந்திபுரம், இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்கெட் அருகில் உள்ள கோபி கானா குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.



இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...