கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு..!

இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


கோவை: கோவை உக்கடம் அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை நகர பகுதியில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் உக்கடம், காந்திபுரம், இரயில் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. தேங்கிய நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்கெட் அருகில் உள்ள கோபி கானா குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.



இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



இதையடுத்து, அவரிடம் பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...