திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 9.13 லட்சம் வழிப்பறி செய்த 4 பேர் கைது..!

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் டாஸ்மாக் மேலாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருப்பூர் காசிபாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றவர் ராஜ பிரகாஷ். இவர் கடையில் விற்பனை தொகை 9 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக கடந்த ஒன்றாம் தேதி கடையிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே சென்ற போது அவரை வழிமறித்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.



பின்னர், இது குறித்து ராஜ பிரகாஷ் அளித்த புகாரையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, தீவிர விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், பவித்ரன், மணிகண்டன் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு இருசக்கர வாகனங்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...