கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
பொள்ளாச்சி: கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ 109 கோடி செலவில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சந்தைப்பேட்டையில் ஒரு நாளைக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாகத் திட்டமிடப்படாததால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சந்தைப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அளித்த பேட்டியின்போது கடந்த அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் செய்த குளறுபடிகள், சரிவரத் திட்டமிடாத பல்வேறு காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
வீட்டு இணைப்புகள் அதிகரித்ததன் காரணமாக 109-கோடியாக இருந்த நிதி தற்போது 170-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்கி இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் 1.2 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொள்ளாச்சியில், கழிவுநீர், சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உறுதியுடன் செயல்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றார்.
இந்த ஆய்வின்போது திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உடனிருந்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ 109 கோடி செலவில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சந்தைப்பேட்டையில் ஒரு நாளைக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாகத் திட்டமிடப்படாததால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சந்தைப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அளித்த பேட்டியின்போது கடந்த அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் செய்த குளறுபடிகள், சரிவரத் திட்டமிடாத பல்வேறு காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
வீட்டு இணைப்புகள் அதிகரித்ததன் காரணமாக 109-கோடியாக இருந்த நிதி தற்போது 170-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்கி இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் 1.2 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொள்ளாச்சியில், கழிவுநீர், சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உறுதியுடன் செயல்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றார்.
இந்த ஆய்வின்போது திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உடனிருந்தார்.