பொள்ளாச்சியில் முடிக்கப்படாத திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும்- சண்முகசுந்தரம் எம்.பி. உறுதி!

கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் தெரிவித்தார்.


பொள்ளாச்சி: கடந்த 5-ஆண்டுகளாக முடிக்கப்படாத குளறுபடிகள் நிறைந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை இரண்டு மாத காலத்திற்குள் தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவார் என ஆய்வுக்குப் பின் பொள்ளாச்சி எம்.பி. தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ரூ 109 கோடி செலவில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சந்தைப்பேட்டையில் ஒரு நாளைக்கு 1.2 கோடி லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாகத் திட்டமிடப்படாததால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.



இதனால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சந்தைப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அளித்த பேட்டியின்போது கடந்த அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2019ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் செய்த குளறுபடிகள், சரிவரத் திட்டமிடாத பல்வேறு காரணமாக பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

வீட்டு இணைப்புகள் அதிகரித்ததன் காரணமாக 109-கோடியாக இருந்த நிதி தற்போது 170-கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்கி இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் 1.2 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொள்ளாச்சியில், கழிவுநீர், சுகாதார சீர்கேடு பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு தமிழக முதலமைச்சர் உறுதியுடன் செயல்படுத்தி முடிவுக்குக் கொண்டு வருவார் என்றார்.

இந்த ஆய்வின்போது திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உடனிருந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...