கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான டிரைவர் கனக ராஜ், சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
தடயங்களை அழித்ததாக, அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அக்டோபர் 25-ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது ஜாமின் மனு விசாரணை, நேற்று நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், 'போலீஸ் விசாரணையில், 3-மொபைல் போன்கள், 6-சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
'பல்வேறு தகவல் கிடைக்க இருப்பதால், ஜாமின் வழங்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான டிரைவர் கனக ராஜ், சில ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் மர்மமான முறையில் இறந்தார்.
தடயங்களை அழித்ததாக, அவரது சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் அக்டோபர் 25-ல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது ஜாமின் மனு விசாரணை, நேற்று நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில், 'போலீஸ் விசாரணையில், 3-மொபைல் போன்கள், 6-சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
'பல்வேறு தகவல் கிடைக்க இருப்பதால், ஜாமின் வழங்க கூடாது' என, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.