தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை?

அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை அளிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 31-வரை விடுமுறை அளிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியதாவது:-

அக்டோபர் 2021 கடைசி வாரத்திலிருந்து தமிழ் நாட்டில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தீபாவளி முடிந்த பிறகு வடமேற்கு பருவ மழை தொடங்கி விட்டது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, தாங்கள் ஓய்வின்றி அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் நேரில் சென்று நிவாரணப் பணிகளை ஆற்றி வருவது மக்களிடையே நல்ல நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், நிலைமைக்குத் தகுந்தாற் போல் பள்ளிகளுக்குத் தனியாகவும், கல்லூரிகளுக்குத் தனியாகவும் விடுமுறை அளித்து வருகிறார்கள்.

ஏதாவது ஒரு மாவட்டத்தில் மழை பெய்யும் பொழுது, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடும் பொழுது, கல்லூரி மாணவர்கள் மழையில் கல்லூரி செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பாரபட்சம் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ் நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் இந்த வருடம் டிசம்பர் 31 வரை விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். டிசம்பர் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களில் இணைய வழி கல்வி தொடருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...