13 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிடத் தொழிலாளி, குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: பொள்ளாச்சி அருகே 13 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டிட தொழிலாளி குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரதிகண்ணன் (20). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் பாரதி கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணன் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாரதிகண்ணன் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பொள்ளாச்சி புரவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாரதிகண்ணன் (20). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் பாரதி கண்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணன் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பாரதிகண்ணன் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.