ஓசை அமைப்பின் சார்பில் "சூழல் சந்திப்பு" நிகழ்ச்சி


ஓசை அமைப்பின் சார்பில் இவ்வாண்டின் இறுதி  "சூழல் சந்திப்பு" மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதுரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக Dr.ஈ.விஜயராகவன் கலந்துக் கொண்டு வனவிலங்குகள் மீட்பு பணியில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் மீட்பு பணி குறித்த அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார். இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் சண்முகசுந்திரம் தலைமை தாங்கினார். 



முன்பாக மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முதல்வர் அம்மா அவர்கள் வன பதுகாப்பாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தும், யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கையை பாதுகாப்பதில் பெருந்துணையாக இருந்தார் எனவும் கூறினர்.. மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை அமைப்பின் செய்யது அவர்கள் கூறுகையில், வர்தா புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு மரங்கள்,எனவே வெளிநாட்டு மரங்களை தவிர்த்த மண் சார்ந்த நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும், பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 



இந்நிகழ்ச்சியில் தன்னார்வு தொண்டர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...