பொள்ளாச்சியில் 13-வயது சிறுமியை திருமணம் செய்த 21-வயது வாலிபர் போக்சோவில் கைது!

பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 13-வயது சிறுமியை திருமணம் செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே கேரளா எல்லைப் பகுதி தனது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது 13-சிறுமிக்கும் 21-வயது வாலிபருக்கும் கடந்த ஒரு மாதமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடந்த சில தினங்கள் முன்பு கூட்டிச் சென்று திருமணம் செய்துள்ளார்.

சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...