பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 13-வயது சிறுமியை திருமணம் செய்த 21-வயது வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே கேரளா எல்லைப் பகுதி தனது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது 13-சிறுமிக்கும் 21-வயது வாலிபருக்கும் கடந்த ஒரு மாதமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடந்த சில தினங்கள் முன்பு கூட்டிச் சென்று திருமணம் செய்துள்ளார்.
சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே கேரளா எல்லைப் பகுதி தனது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வரும் பொழுது 13-சிறுமிக்கும் 21-வயது வாலிபருக்கும் கடந்த ஒரு மாதமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்குக் கடந்த சில தினங்கள் முன்பு கூட்டிச் சென்று திருமணம் செய்துள்ளார்.
சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை செய்ததில் வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபரை குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.