நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.!

கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2-வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், கோவையில் உள்ள பெரும்பாலான குளங்கள் 100-சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளன.

அதன்படி மாநகர மைய பகுதியில் அமைந்துள்ள உக்கடம் வாலாங்குளம் 100-சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், குளத்திலிருந்து நீர் வெளியேறி திருச்சி சாலை வழியாக ஆறு போல் ஓடி வருகிறது.

ஏற்கனவே, மழையால் சாலைகள் மோசமடைந்து மழை நீர் ஆங்காங்கே தேங்கியிருக்கும் சூழலில், தற்போது குளத்திலிருந்து நீர் வெளியேறி வருவதன் காரணமாகவும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

உக்கடம் பெரியகுளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் இந்த குளத்தில் சேரும் நிலையில், உக்கடம் பெரிய குளத்திலிருந்து வெளியேறும் நீரை தடுக்காமல் விட்டதாலும், வாலாங்குளத்தில் இருந்து நீர் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும் சுமார் 160-ஏக்கர் பரப்பளவு கொண்ட வாலாங்குளம் இந்த ஆண்டு மிக வேகமாக நிரம்பியது.

வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்தால், திருச்சி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழும் என்றும் அச்சம் பொதுமக்களிடையே உள்ளது. இந்நிலையில், தற்காலிகமாக வாலாங்குளத்தில் உள்ள ஷட்டர் திறக்கப்பட்டு, தண்ணீர் மீண்டும் உக்கடம் பெரியகுளம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், உக்கடம் செல்லும் சாலையின் ஓரமாக உள்ள குளத்தின் கரையோர ஒரு பகுதியில் கூடுதலாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. மணல் மூட்டைகள் தற்காலிகமாக நீரை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதிலிருந்து தடுக்கும் என்றாலும், ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை மாநகராட்சி ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சாக்கடை கால்வாய் வழியாக நீர் சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது அதில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருந்ததால் தான், திருச்சி சாலையில் நீர் அதிகளவு வெளியேறுவதாகவும், வாலாங்குளத்தில் இருந்து நீர் சேரும் அம்மன் குளம் தற்போது அழிந்ததும், வாலாங்குளத்தில் முறையான நீர் வெளியேற்று (outlet) பாதை இல்லாததும் ஆண்டுதோறும் மழை கொஞ்சம் அதிகமாகப் பெய்தாலும் இந்த பிரச்சினை வருவதால், அதனைச் சரி செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...