கோவையில் வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது!

வீடு புகுந்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டவரை கோவை மாவட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்து, அவரிடமிருந்து 10-பவுன் தங்க நகை, லேப்டாப்-1, கேமரா-1 மற்றும் ஐ பேட்-1 ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.


கோவை :வீடு புகுந்து கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்டவரை கோவை மாவட்ட காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்கும் பொருட்டு உதவி ஆய்வாளர்கள் உதயச்சந்திரன், பாண்டியராஜ், தலைமைக் காவலர் மகாராஜன் (HC 1390) மற்றும் முதல்நிலைக் காவலர் முத்துக்கருப்பன்(Gr 1 2004) ஆகியோர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது.

இத்தனிப் படைக்குழுவினர் துரிதமான முறையில் விரைந்து செயல்பட்டு கிருஷ்ணாபுரம் மற்றும் சோமனூர் பகுதியில் கடந்த 01.11.2021-ம் தேதி வீடு புகுந்து கொள்ளையடித்து மற்றும் அதே பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்ற வழக்கின் குற்றவாளியான முபாரக் அலி (வயது 29) கைது செய்தும், அவரிடமிருந்து 10 பவுன் தங்க நகை, லேப்டாப்-1, கேமரா-1 மற்றும் ஐ பேட்-1 ஆகியவற்றைப் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...