கோதவாடி குளத்திற்கு ஊற்று நீரை கொண்டு சென்ற விவசாயிகள்!

கிணத்துக்கடவு அருகே வாய்க்கால் அமைத்து ஊற்று நீரை கோதவாடி பகுதியில் உள்ள குளத்திற்கு விவசாயிகள் திருப்பிவிட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே வாய்க்கால் அமைத்து ஊற்று நீரை கோதவாடி பகுதியில் உள்ள குளத்திற்கு விவசாயிகள் திருப்பிவிட்டனர்.

கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் 152-ஏக்கர் பரப்பளவில் உள்ள மிக பெரிய கோதவாடி குளம் உள்ளது.

இந்த குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்றக் கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வ அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இணைந்து குளத்தில் பகுதியிலுள்ள முட்புதர்களை அகற்றவும், குளத்தில் கரைகளையும் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வடகிழக்கு மழை காரணமாகக் கடந்த சில நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த குளத்திற்கு வரும் நீர்வழிப் பாதைகளையும் சீரமைக்கும் பணி நிறைவு பெற்று முடிந்துள்ளது.

இந்த குளத்திற்கு விவசாயிகள் மற்றும் கோதவாடி குளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராம மக்கள் மழை காலங்களில் வீணாகச் செல்லும் உபரி நீரைக் கோதவாடி குளத்திற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கும் பிஏபி அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து உள்ளனர்.

கோதவாடி குளத்திற்கு பிஏபி வாய்க்கால் மூலம் உபரி நீர் வழங்க அதிகாரிகள் இன்னும் முன்வராததால் கோதவாடி குளத்திற்கு உபரிநீர் எப்போது கிடைக்கும் என்ற கனவோடு விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருவதால் கோதவாடி குளத்தின் அருகிலுள்ள தோட்டங்களில் மழை நீர் ஊற்று எடுத்து வருகிறது.



இதனால் தற்போது கோதவாடி குளம் அருகே இருக்கும் விவசாயிகள் நிலத்திலிருந்து ஊற்று எடுத்து வரும் தண்ணீரை வாய்க்கால் ஏற்படுத்திக் கோதவாடி குளத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...