பொள்ளாச்சி அருகே தொடர் கனமழை காரணமாக - தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியது!

தொடர் மழை காரணமாக தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.


பொள்ளாச்சி: தொடர் மழை காரணமாக தரைமட்ட பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர் ஊராட்சி கெங்கம் பாளையத்தில் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து ரூபாய் மூன்று லட்சம் செலவில் தரைமட்ட பாலம் அமைத்தனர்.

தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர பலமுறை துறை சார்ந்த அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.

கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்ல இப்பாலம் பொது மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் பயன்பாட்டிலிருந்து வருகிறது.

ஆழியாறு அணை, திருமூர்த்தி மலை அணையில் இருந்து திறந்து விடப்படும் உப நீர் வருவதால் பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதனால் அப்பகுதியில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.



கடந்த 2-வருடங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடந்த ஆட்சியில் இழப்பீடு தர வில்லை என்பதைக் குறிப்பிடத்தக்கது.

மேலும், பகுதிக்கு வரும் அரசு பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வருவதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.



தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...