வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 3 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை..!

வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா ஆகிய மூவரும் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.


கோவை: வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 3 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா இவர்கள் மூவரும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆவர்.

மிதுனா (உருளிக்கல்), மகாலட்சுமி (பச்சமலை), தர்ஷினி (ஈட்டியார்) இவர்களின் தாய், தந்தை தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதில் மிதுனா சூர்யாவின் அகரம் பவுண்டேசன் சார்பாக BE Aeronautical அதாவது வான்வெளி பொறியியல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன் மற்றும் ஆசிரியைகள் சுமதி கொடுத்த சிறப்புப் பயிற்சி மூலமாக இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...