வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா ஆகிய மூவரும் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை: வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 3 மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா இவர்கள் மூவரும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆவர்.
மிதுனா (உருளிக்கல்), மகாலட்சுமி (பச்சமலை), தர்ஷினி (ஈட்டியார்) இவர்களின் தாய், தந்தை தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதில் மிதுனா சூர்யாவின் அகரம் பவுண்டேசன் சார்பாக BE Aeronautical அதாவது வான்வெளி பொறியியல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன் மற்றும் ஆசிரியைகள் சுமதி கொடுத்த சிறப்புப் பயிற்சி மூலமாக இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளான தர்ஷினி, மகாலட்சுமி, மிதுனா இவர்கள் மூவரும் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆவர்.
மிதுனா (உருளிக்கல்), மகாலட்சுமி (பச்சமலை), தர்ஷினி (ஈட்டியார்) இவர்களின் தாய், தந்தை தனியார் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதில் மிதுனா சூர்யாவின் அகரம் பவுண்டேசன் சார்பாக BE Aeronautical அதாவது வான்வெளி பொறியியல் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராபின்சன் மற்றும் ஆசிரியைகள் சுமதி கொடுத்த சிறப்புப் பயிற்சி மூலமாக இவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.