கோவையில் நாளை ஆன்லைன் மூலம் ஓய்வு ஊதியர்கள் பி.எப். சந்தாதாரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., மண்டல அலுவலகத்தில் 'நிதி ஆப்பே நிகட்' என்ற பெயரில் ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டம், மண்டல பி.எப்., கமிஷனர் தலைமையில் நாளை ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.
காலை, 11 முதல் 12 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல் 12 முதல் 1 மணி வரையும், ஓய்வூதியர்களுக்கு, 2:30 முதல் 3:30 மணி வரையும் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வைப்பு நிதி யுஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் மொபைல் எண்கள், இ--மெயில் (கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்) ஆகிய விபரங்களுடன், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், தரப்பட்டுள்ள இ-மெயிலுக்கு, அன்றைய தினம், ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும். இந்த தகவலை, பி.எப்., உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.
காலை, 11 முதல் 12 மணி வரையும், தொழிலதிபர்கள் (விலக்கு அளிக்கப்படாத மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள்) பகல் 12 முதல் 1 மணி வரையும், ஓய்வூதியர்களுக்கு, 2:30 முதல் 3:30 மணி வரையும் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஓய்வூதியர்கள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வைப்பு நிதி யுஏஎன் எண், தொலைபேசி எண் மற்றும் மொபைல் எண்கள், இ--மெயில் (கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்) ஆகிய விபரங்களுடன், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், தரப்பட்டுள்ள இ-மெயிலுக்கு, அன்றைய தினம், ஆன்லைன் இணைப்பு வழங்கப்படும். இந்த தகவலை, பி.எப்., உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்தார்.