கந்த சஷ்டி கவச விழாவிற்கு கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை..!

பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: கந்த சஷ்டி கவச விழாவிற்கு கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முருகப் பெருமானை வணங்கி கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படும் கந்தசஷ்டி ஆகும். பலர் சஷ்டி விரதம் மேற்கொண்டு கந்தசஷ்டி நாள் அன்று முருகனை தரிசித்து தங்களது விரதத்தை முடிப்பது பாரம்பரிய ஐதீகம் ஆகும்.

இந்நிலையில், இன்று திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் இன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வேண்டும் வரங்களை அள்ளித் தரும் கந்தப்பெருமான் கோவிலில் வருடம் தோறும் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.

தற்போது, ஊரடங்கு பல தளர்வுகள் இருந்தபோதிலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், விரைவில் தமிழக அரசு பண்டிகை காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...