பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர்: கந்த சஷ்டி கவச விழாவிற்கு கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முருகப் பெருமானை வணங்கி கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படும் கந்தசஷ்டி ஆகும். பலர் சஷ்டி விரதம் மேற்கொண்டு கந்தசஷ்டி நாள் அன்று முருகனை தரிசித்து தங்களது விரதத்தை முடிப்பது பாரம்பரிய ஐதீகம் ஆகும்.
இந்நிலையில், இன்று திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் இன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வேண்டும் வரங்களை அள்ளித் தரும் கந்தப்பெருமான் கோவிலில் வருடம் தோறும் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.
தற்போது, ஊரடங்கு பல தளர்வுகள் இருந்தபோதிலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், விரைவில் தமிழக அரசு பண்டிகை காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் முருகப் பெருமானை வணங்கி கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படும் கந்தசஷ்டி ஆகும். பலர் சஷ்டி விரதம் மேற்கொண்டு கந்தசஷ்டி நாள் அன்று முருகனை தரிசித்து தங்களது விரதத்தை முடிப்பது பாரம்பரிய ஐதீகம் ஆகும்.
இந்நிலையில், இன்று திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த கொங்கணகிரி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த பெருமான் திருக்கோவில் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் இன்று முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வேண்டும் வரங்களை அள்ளித் தரும் கந்தப்பெருமான் கோவிலில் வருடம் தோறும் சூரசம்ஹாரம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் சூரசம்ஹாரம் விழா பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது.
தற்போது, ஊரடங்கு பல தளர்வுகள் இருந்தபோதிலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும், விரைவில் தமிழக அரசு பண்டிகை காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.