திருப்பூர் பெருமாநல்லூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து, சாலைகளிலேயே தேங்கி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பொதுமக்கள் சார்பில் அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெருமாநல்லூர் அடுத்த காமாட்சி கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் சூழ்நிலையில், சாக்கடை வசதி, சாலை வசதி போன்றவைகள் இல்லாததை சுட்டிக்காட்டி சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மழைக்காலம் என்பதால் சாக்கடை வசதி இல்லாததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலைகளிலேயே தேங்குவதால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காமாட்சி கார்டன் பகுதியை பார்வையிட்டு சாலை வசதி, சாக்கடை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...